2016-04-11 16:11:00

புட்டிங்கல்-பாதிக்கப்பட்டுள்ளவருடன் கத்தோலிக்கர் ஒருமைப்பாடு


ஏப்.11,2016. இந்திய கத்தோலிக்கத் திருஅவையும், Paravurல், புட்டிங்கல் இந்துக் கோவில் வளாகத்தில், ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்திருப்பது மற்றும் காயமடைந்திருப்பது குறித்த தனது ஆழ்ந்த கவலையையும், வேதனையையும் தெரிவித்துள்ளது.

இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவைத் தலைவரும், மும்பைப் பேராயருமான கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், இதில் உயிரிழந்த மற்றும் காயமடைந்துள்ளவர்களின் குடும்பங்களுக்குத் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

இதில் காயமடைந்துள்ள 350க்கும் மேற்பட்ட மக்களுக்கு, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, மருத்துவ உதவிகளை வழங்கும் என்று உறுதி கூறியுள்ளார் கர்தினால் கிரேசியஸ். 

இந்து புத்தாண்டை முன்னிட்டு, இக்கோவில் வளாகத்தில், இரவு முழுவதும் பட்டாசு வெடித்து நடைபெற்ற கொண்டாட்டத்தில், ஏறக்குறைய 15 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.