2016-04-01 17:11:00

இது இரக்கத்தின் காலம்: இயல்பு வாழ்வை புரிந்துகொள்வதே ஞானம்


சிரிக்கும் புத்தர் என அன்பாக அழைக்கப்பட்ட ஜென் துறவி ஒருவர், எப்பொழுதும் சந்தோசமாக ஒரு மூட்டையில் சாக்லேட், பிஸ்கட் போன்றவைகளை நிரப்பிக் கொண்டு வழியில் பார்க்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக செய்து வந்தார். அவர், ஜென் பக்தர்களை பார்க்கும் போதும், அவர்களிடம் ஒரு ரூபாய் கொடு என்று கை நீட்டி கேட்பார். ஒரு நாள் அவர் மற்றொரு ஜென் துறவியை பார்த்தார். அப்பொழுது அந்த புதிய ஜென் துறவி இவரிடம், "ஜென் வாழ்கையின் முக்கியத்துவம் என்ன?" என்று வினவினார். இவர் உடனே அவர் சுமந்து கொண்டு இருந்த, அந்த மூட்டையை கீழே வீழ்த்தினார். பின்னர் அந்த மற்றொரு ஜென் துறவி மறுமுறை அவரிடம் "ஜென்னின் இயல்பாக்கம் என்ன?" என்றார். அதற்கு அந்த சிரிக்கும் புத்தரான ஜென் துறவி மீண்டும் அந்த மூட்டையை தன் தோளில் சுமந்து அவர் வழியே சென்றார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.