2016-03-21 16:55:00

ஆயுதம் தாங்கிய குழுக்களால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு


மார்ச்,21,2016. ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழுக்களால் நிக்கராகுவா நாட்டின் அயபால் (Ayapal) பகுதியில் ஆசிரியர்கள் மிரட்டப்பட்டு வருவதையொட்டி, 60க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளனர், தலத்திருஅவை அதிகாரிகள்.

அயபாலின் பொகெய் (Bocay) நதிப் பகுதியில் பள்ளிக்குச் செல்லும் வயதுடைய ஏறத்தாழ 2100 குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த, அப்பகுதி ஆயர் Abelardo Mata அவர்கள், ஆயுதம் தாங்கிய குழுக்களின் இருப்பு, தொடரும் பழிவாங்கும் உணர்வு, நீதி குறித்த ஏக்கம், அரசு அதிகாரிகளின் அதிகார மீறல் போன்றவை, குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதற்கான முக்கியக் காரணங்கள் என உரைத்தார்.

தங்கள் அரசியல் எதிரிகளுக்கு ஆதரவாக ஆசிரியர்கள் செயல்படுகிறார்கள் என சந்தேகித்து, சில ஆயுதம் தாங்கிய குழுக்கள், ஆசிரியர்களை அச்சுறுத்தி வருவதால், பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மேலும் கூறினார் ஆயர் Mata.

ஆதாரம் : FIDES / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.