2016-03-18 16:35:00

இலங்கை சிறுபான்மையினருக்கு சம உரிமை வேண்டி, கிறிஸ்தவ அமைப்பு


மார்ச்,18,2016. இலங்கை அரசியலைப்பில் மாற்றங்களைக் கொணர்வதற்கென உருவாக்கப்பட்ட 20 பேர் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அவை, இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வதற்கு, தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் விவாதங்களில், முக்கியத்துவம் கொடுக்க வலியுறுத்தப்படும் என்றார் அந்நாட்டு அருள்பணி சரத் இடமல்கோடா.

இலங்கையில் சிறுபான்மை சமூகத்தினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக புகார்கள் உள்ள நிலையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும் உழைக்கவேண்டியது திருஅவையின் கடமையாகிறது என்றார் CSM என்ற கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்பணி இடமல்கோடா.

ஒவ்வொரு சமூகத்தின் தனித்துவங்களை மதித்தல், அதிகாரப் பகிர்வு, தெற்கையும் வடக்கையும் இணைத்தல், மத சரிநிகர் தன்மை, இலவசக் கல்வி மற்றும் நலவாழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றை, இலங்கையின் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

1977ம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள இலங்கையின் புதிய அரசியலமைப்பு, ஏற்கனவே 19 முறைகள்  திருத்தப்பட்டுள்ளபோதிலும், தற்போதைய விவாதங்களும் மாற்றப் பரிந்துரைகளும், உள்நாட்டுப் போருக்குப் பின் உருவாகியுள்ள நிலைகளை கவனத்தில் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.