2016-03-15 17:19:00

மத சகிப்பற்ற தன்மைகளைக் கட்டுப்படுத்த ஒன்றிணையுங்கள்


மத சகிப்பற்ற தன்மைகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வேண்டுமெனில், அனைத்துலக ஒத்துழைப்பும், மதங்களிடையே கலந்துரையாடலும் இன்றியமையாதவை என உரைத்தார் திருப்பீட உயர் அதிகாரி, பேராயர் Paul Gallagher.

மறைப்பணி பயிற்சி குறித்து உரோம் மறைமாவட்டத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய, திருப்பீடத்தின் வெளியுறவுச் செயலர், பேராயர் Gallagher அவர்கள், மத தீவிரவாதமும் மத வன்முறைகளும் இன்றைய உலகில் மிகப்பெரும் பிரச்சனைகளாக மாறியுள்ளன என்றார்.

மத அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படாமை, மத சகிப்புத்தன்மை, மத விடுதலைக்கான உரிமை மதிக்கப்படுதல், அனைத்துலக ஒத்துழைப்புடன் மத தீவிரவாதத்தை ஒடுக்குதல் போன்றவை வழியாகவே மத வன்முறைகளை களைய முடியும் என கூறிய பேராயர் Gallagher அவர்கள், மத சகிப்பற்ற தன்மைகள் மேற்கத்திய நாடுகளிலும் காணப்படுகின்றன என மேலும் எடுத்துரைத்தார்.

ஆதாரம்: CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.