2016-03-14 17:10:00

அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியேற்றதாரருக்காக திருஅவையின் குரல்


மார்ச்,14,2016. அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்திலிருக்கும் பல இலட்சக்கணக்கான குடியேற்றதாரர்களுக்கு, மனிதாபிமான உதவிகளை வரையறுக்கும் விதிமுறைகள் அடங்கிய மனுவை, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பதிவுச் செய்துள்ளது, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை.

24 மதக் குழுக்களுடன் இணைந்து, இந்த மனுவை நீதிமன்றத்தில் பதிவுச் செய்துள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், அனுமதியின்றி குடியேறியுள்ளவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் வழங்கவேண்டிய உதவிகள் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் உறவினர்களைக் கொண்டிருக்கும் அதேவேளையில், தேசத்தின் பாதுகாப்பிற்கு எவ்வகையிலும் அச்சுறுத்தலாக இல்லாத குடியேற்றதாரர்களை பலவந்தமாக திருப்பி அனுப்புவது குறித்த கேள்விகளையும் நீடிமன்றத்தில் முன்வைத்துள்ளனர், அமெரிக்க ஆயர்கள்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் வளர்ச்சியில் குடியேற்றதாரர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்தும் சிந்திக்க வேண்டிய அவசியத்தையும் ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : ICN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.