2016-03-12 16:57:00

தொழிலாளர்களுக்கென திருஅவையின் நூலகம்


மார்ச்,12,2016   மக்களுக்கான சமூகப் பணிகளின் ஒரு பகுதியாக, தொழிலாளர்களுக்கென நூலகம் ஒன்றை திறந்துள்ளது, கம்போடிய தலத்திருஅவை.

Phnom Penh நகரின் தொழிலாளர் குடியிருப்பின் நடுவே இந்த நூலகத்தைத் திறந்து வைப்பதன் வழியாக, தொழிலாளர்களின் வாசிப்பு தாகத்திற்கு உதவ முடியும் என தலத்திருஅவை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நூலகத்தைத் திறந்துள்ளதன் வழியே, தொழிலாளர்களும் அவர்களின் குழந்தைகளும் தங்கள் நேரத்தை நல்ல முறையில் செலவிட உதவ முடியும் என, இந்நூலகத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Francois Sede Ric என்பவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பு ஒன்றின் வழியே இந்நூலகம் நிறுவப்பட்டுள்ளது.

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.