2016-03-11 16:06:00

டில்லியில் கிறிஸ்தவ, இஸ்லாமியத் தலித்துக்களின் போராட்டம்


மார்ச்,11,2016. இந்தியாவில், இந்து தலித் மக்கக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தலித் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, புது டில்லியில் இவ்வியாழனன்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது என்று, UCAN செய்தி கூறுகிறது.

2000த்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில், இந்திய ஆயர் பேரவையின், தலித் மற்றும் பழங்குடியினர் பணிக்குழுவின் செயலர், அருள்பணி தேவ சகாயராஜ் அவர்களும் ஒருவர்.

தலித் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் சலுகைகள் தரப்பட்டால், அது, அதிகமான மத மாற்றத்திற்கு வழிவகுத்துவிடும் என்று இந்து அடிப்படைவாதிகள் கூறிவருவது அர்த்தமற்ற விவாதம் என்று அருள்பணி சகாயராஜ் அவர்கள் எடுத்துரைத்தார்.

தலித் கிறிஸ்தவ தேசியக் கழகம், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை உட்பட ஏறத்தாழ 100 அமைப்பினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்று UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது. 

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.