2016-03-10 17:02:00

ஏமனில் கொலையுண்ட அருள்சகோதரிகள் குறித்த விவரங்கள்


மார்ச்,10,2016. ஏமன் நாட்டின் ஏடன் நகரில், கடந்த வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு அருள் சகோதரிகள் குறித்த முழு விவரங்களை தெற்கு அரேபியப் பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகியான ஆயர் பால் ஹிண்டெர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் இராஞ்சியைச் சார்ந்த அருள் சகோதரி ஆன்செல்மா அவர்கள், 60 வயது நிறைந்தவர் என்றும், கென்யாவைச் சேர்ந்த அருள்சகோதரி ஜூடித் அவர்கள், 41 வயது நிறைந்தவர் என்றும் ஆயர் ஹிண்டெர் அவர்கள் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.

கொல்லப்பட்ட ஏனைய இரு சகோதரிகள், ருவாண்டா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் அருள்சகோதரி மார்கரெட் அவர்களுக்கு 44 வயது என்றும், இந்நால்வரில் மிக இளையவரான அருள்சகோதரி ரெஜினெட் அவர்களுக்கு 33 வயது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட நான்கு சகோதரிகள் மற்றும் ஏனையப் பணியாளர்கள் அனைவருமே கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு, தலையில் சுடப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருளாளர் அன்னை தெரேசா அவர்களால் உருவாக்கப்பட்ட பிறரன்பு மறைப்பணியாளர் சபையைச் சேர்ந்த சகோதரிகள், கடந்த 24 ஆண்டுகளாக ஏடன் நகரில் முதியோர் இல்லத்தை நிறுவி பணியாற்றிவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.