2016-03-07 15:39:00

சிங்கப்பூர் திருஅவையில் புதிதாக 1000த்துக்கு மேற்பட்டவர்கள்


மார்ச்,07,2016. வருகிற கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவன்று கத்தோலிக்கத் திருஅவையில் சேர்வதற்காக, 1,127 பேர், சிங்கப்பூர் உயர்மறைமாவட்டத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவரல்லாத 498 பேரும், கத்தோலிக்கத் திருஅவையோடு முழுவதுமாக இணைய விரும்பும் 68 பேரும் சிங்கப்பூர் உயர்மறைமாவட்ட கிறிஸ்து அரசர் ஆலயத்தில் தயாரிக்கப்பட்டு வருகின்றனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சகாய அன்னை ஆலயத்தில், கிறிஸ்தவரல்லாத 393 பேரும், கத்தோலிக்கத் திருஅவையோடு முழுவதுமாக இணைய விரும்பும் 33 பேரும் தயாரிக்கப்பட்டு வருகின்றனர்.

கத்தோலிக்கத் திருஅவையில் சேர்கிறவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு 17 விழுக்காடு அதிகம் என்று, சிங்கப்பூர் பேராயர் வில்லியம் கோ அவர்கள் கூறினார். 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.