2016-03-03 15:33:00

கிழக்கு திமோர் நாட்டின் பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு


மார்ச்,03,2016. கிழக்கு திமோர் நாட்டின் பிரதமர், Rui Maria de Araújo அவர்கள், இவ்வியாழன் காலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

கிழக்கு திமோர் நாட்டிற்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டில் தலத்திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது என்று, வத்திக்கான் செய்தித் தொடர்பகம் கூறியது.

பிரதமர் Maria de Araújo அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பிற்குப் பின், திருப்பீடச்  செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை சந்தித்துப் பேசினார். அவ்வேளையில், வத்திக்கானுக்கும், கிழக்கு திமோர் நாட்டிற்கும் இடையே அரசுதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்ட்டது.

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கர்தினால் பரோலின் அவர்கள், கிழக்கு திமோர் நாட்டின் தலைநகர் டிலிக்கு (Dili) பயணம் மேற்கொண்ட வேளையில், இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவக்கூடிய ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.