2016-02-29 16:28:00

புலம்பெயர்ந்தவர்க்காகச் செபிக்க திருத்தந்தை அழைப்பு


பிப்.29,2016. போரினால் புலம் பெயர்ந்தவர்கள், மனிதமற்ற நிலைகளில் இருப்பதைக் குறிப்பிட்டு, அம்மக்களுக்காகச் செபிக்குமாறு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புலம்பெயர்ந்தவர்க்கு முன்னணியில் நின்று உதவும் கிரேக்க நாடு மற்றும் பிற நாடுகள் பற்றிக் குறிப்பிட்டு, புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவுவதில் எல்லா நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

புலம்பெயர்ந்தவர் பிரச்சனையின் சுமை சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதற்கு உதவியாக, சிரியா குறித்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் திட்டவட்டமான முடிவு அவசியம் என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், கடும் புயலால் பாதிக்கப்பட்ட ஃபீஜித் தீவு மக்களுக்காகச் செபிக்குமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.