2016-02-23 15:07:00

தாய்வான் நிலஅதிர்ச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி


பிப்.23,2016. இம்மாதம் 6ம் தேதி தாய்வானில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஐம்பதாயிரம் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட கோர் ஊனும் பிறரன்பு அவை, தாய்வான் ஆயர்கள் பேரவைக்கு, திருத்தந்தையின் பெயரில் இந்நிதி உதவியை வழங்கியுள்ளதை, தாய்பேய் வெளியுறவு விவகார அமைச்சகம் உறுதிசெய்துள்ளது.

தாய்வானில் இடம்பெற்ற கடும் நிலநடுக்கத்தில், ஒரு வளாகத்தில் வாழ்ந்தவர்கள் மட்டுமே 115 பேர் இறந்துள்ளனர். 

மேலும், தாய்வானில், 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலும் செபமும் நிறைந்த தந்திச் செய்தி ஒன்றையும், திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியிருந்தார்.  

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.