2016-02-22 15:10:00

திருப்பயணிகளுக்கு திருத்தந்தை ஆன்மீக மருந்து


பிப்.22,2016. Misericordin என்ற மற்றோர் ஆன்மீக மருந்தை வழங்குவற்கு நேரம் வந்துள்ளது என்று, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் செபமாலையும், இறை இரக்க இயேசுவின் படமும் அடங்கிய, சிறு அட்டைப்பெட்டி ஒன்றை, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளிடம் காட்டி, இந்தக் கொடையை, ஓர் ஆன்மீக உதவியாக, குறிப்பாக, இந்த இரக்கத்தின் ஆண்டில் ஏற்று, அன்பு, மன்னிப்பு மற்றும் உடன்பிறப்பு உணர்வை பரப்புமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இரக்கத்தை மையமாகக் கொண்ட தவக்காலம், மனமாற்றப் பயணத்தை நிறைவுசெய்வதற்கு நல்ல காலம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

திருஅவையில் விசுவாச ஆண்டு சிறப்பிக்கப்பட்டபோது, 2013ம் ஆண்டு நவம்பரிலும், Misericordin என்ற ஆன்மீக மருந்தை, அன்று ஞாயிறு மூவேளை செப உரைக்கு வந்திருந்த எல்லாருக்கும் இலவசமாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வீடற்றவர், புலம்பெயர்ந்தவர், ஏழைகள் உட்பட, தன்னார்வலர்கள் வத்திக்கான் வளாகத்தில், இஞ்ஞாயிறன்று இந்தச் செபமாலை பெட்டியை அனைவருக்கும் இலவசமாக வழங்கினர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.