2016-02-15 15:24:00

எக்காத்தெபெக் குருத்துவக் கல்லூரியில் திருத்தந்தை


பிப்.15,2016. எக்காத்தெபெக் கல்வி மைய வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலிக்குப் பின்னர், அந்நகர் குருத்துவக் கல்லூரிக்கு எளிமையான ஃபியாட் காரில் சென்று மதிய உணவருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அக்குருத்துவக் கல்லூரியில், விருந்தினர் புத்தகத்தில் செய்தி ஒன்றையும் எழுதி கையெழுத்திட்டார் திருத்தந்தை. இந்த இல்லத்தில், அருள்பணியாளர் ஆவதற்குப் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் அனைவரும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவையும், அவரின் புனித அன்னையையும் தங்களின் மனத்தில் எப்போதும் வைத்திருப்பார்களாக. மேலும், அவர்கள், நாட்டின் அருள்பணியாளர்களாக அல்ல, இறைவனின் விசுவாசமுள்ள மக்களின் மேய்ப்பர்களாகத் தங்களைத் தயாரிப்பார்களாக என்று  விருந்தினர் புத்தகத்தில் எழுதினார் திருத்தந்தை பிரான்சிஸ். அக்குருத்துவக் கல்லூரியில் பிற்பகலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் மாலை 4.35 மணியளவில் எக்காத்தெபெக் குருத்துவக் கல்லூரியிலிருந்து புறப்பட்டார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி  








All the contents on this site are copyrighted ©.