2016-02-13 14:24:00

திருத்தந்தையும், முதுபெரும் தந்தையும் வழங்கிய வாழ்த்துரைகள்


பிப்.13,2016. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை:

நாங்கள் இருவரும் இங்கு சகோதரர்கள் போல் பேசிக்கொண்டோம். நாங்கள் ஒரே திருமுழுக்கு பெற்றவர்கள், நாங்கள் சகோதர ஆயர்கள். உண்மையாகவே உரையாடும் உள்ளத்துடன், இங்கு நாங்கள் தெளிவாகப் பேசிக்கொண்டோம். முதுபெரும் தந்தை கிரில் அவர்களின் பணிவையும், உடன்பிறந்த உணர்வையும் நான் பாராட்டுகிறேன். இவ்விரு சபைகளைச் சார்ந்தவர்கள் இணைந்து செய்யக்கூடிய முயற்சிகளை நாங்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம். இவை, நடக்கக்கூடியவை, வருங்காலத்தில் இவை நிறைவேறும்.

கியூபா மக்களுக்கும், கியூபாவின் அரசுத் தலைவருக்கும் மனம் நிறைந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

தந்தை, மகன், தூய ஆவியாரின் மகிமைக்காகவும், இறை மக்களின் நன்மைக்காகவும், அன்னை மரியாவின் அரவணைப்பானப் பாதுகாவலில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை கிரில் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை:

இரு மணி நேரங்களாக நாங்கள் இருவரும் திறந்த மனதுடன் கலந்து பேசினோம். எங்கள் திருஅவைகள், அவற்றின் மக்கள், கிறிஸ்துவத்தின் எதிர்காலம், மனித குலத்தின் எதிர்காலம் இவை அனைத்தையும் மனதில் கொண்டு நாங்கள் பேசினோம். ஒருவரை ஒருவர்  சரியாகப் புரிந்துகொள்ள எங்கள் உரையாடல் உதவியது.

இரு திருஅவைகளும் இணைந்து, உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க, கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்ள முடியும். மனித உயிரைப் பேணிக்காக்கும் முயற்சிகளையும், குடும்ப உறவுகள், சமுதாய நன்னெறிகள் இவற்றைக் காக்கவும் முயற்சிகள் செய்யமுடியும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.