2016-02-12 16:21:00

மேரி மேஜர் பசிலிக்கா, இலாத்தரன் பசிலிக்காவில் திருத்தந்தை


பிப்.12,2016. மெக்சிகோ நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு இவ்வியாழனன்று உரோம் மேரி மேஜர் பசிலிக்கா சென்று Salus Populi Romani அன்னை மரியாவிடம் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னரும், அப்பயணத்தை நிறைவு செய்த பின்னரும், மேரி மேஜர் பசிலிக்கா சென்று அன்னை மரியாவிடம் செபித்து மலர்களைக் காணிக்கையாக அர்ப்பணிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இன்னும், மேரி மேஜர் பசிலிக்காவில் அன்னை மரியாவிடம் செபித்த பின்னர், உரோம் ஜான் இலாத்தரன் பசிலிக்கா சென்று, தவக்காலத்தின் தொடக்கமாக, அப்பசிலிக்காவில் கூட்டம் நடத்திய உரோம் மறைமாவட்ட அருள்பணியாளர்களையும் சந்தித்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்சந்திப்பில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் பெயர் இரக்கம் என்ற தனது நூலையும் அருள்பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் அளித்தார் என்று, கர்தினால் அகுஸ்தீனோ வல்லினி அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.