2016-02-06 16:01:00

புதுடெல்லியில், இந்திய-ஆஸ்திரேலிய பல்சமய திருப்பயணம்


பிப்.06,2016. மதங்கள் மத்தியில் உரையாடலை உயிரூட்டம் பெறச்செய்யும் நோக்கத்தில், புதுடெல்லியில், இந்திய-ஆஸ்திரேலிய பல்சமய திருப்பயணம் ஒன்று இச்சனிக்கிழமையன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தங்கள் நாடுகளில் மதங்கள் மத்தியில் உறவுகளை உருவாக்க உழைக்கும் பல்வேறு மதத்தினர் இதில் கலந்து கொள்கின்றனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து இச்சனிக்கிழமையன்று புதுடெல்லி வந்தடைந்த சில பல்சமய திருப்பயணிகள் இந்தியாவின் பல இடங்களுக்குத் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என்றும், இப்பயணம், பிப்ரவரி 8ம் தேதி புதுடெல்லியில் நிறைவடையும் என்றும், பின்னர் அமைதிக்கான பல்சமய கூட்டமைப்புடன் கூட்டம் ஒன்று நடக்கும் என்றும் அருள்பணி விக்டர் எட்வின் அவர்கள் கூறினார்.  

இவ்வாண்டு உலக பல்சமய நல்லிணக்க வாரம் இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.