2016-02-02 15:40:00

வத்திக்கான் பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலி


பிப்.02,2016. “மரியே, இயேசுவின் தாயே, எங்கள் வாழ்வில் நாங்கள் சந்திக்கும் எல்லாரோடும் ஆண்டவரின் வியப்புக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவியருளும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 10, திருநீற்றுப் புதனன்று, மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றி, இரக்கத்தின் மறைப்பணியாளர்களை, பணிக்கு அனுப்புவார்.

கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்டு வரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு நிகழ்வாக, அனைத்துக் கண்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்ட இரக்கத்தின் மறைப்பணியாளர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

திருப்பீடம் மட்டுமே மன்னிக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ள ஒரு சில பாவங்களுக்கு இம்மறைப்பணியாளர்கள், இந்த யூபிலி ஆண்டில் மன்னிப்பு வழங்குவார்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.