2016-01-25 16:05:00

மத்திய பிரதேச தலத்திருஅவை சில அரசுப் பள்ளிகளை நடத்த திட்டம்


சன.25,2016. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், சில அரசுப் பள்ளிகளை, தலத்திருஅவை எடுத்து நடத்தும் திட்டம் இருப்பதாக, போபால் பேராயர் லியோ கொர்னேலியோ அவர்கள் கூறினார்.

வளர்ச்சியடையாத சில மாவட்டங்களில் அரசு நடத்தும் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், அவற்றை நடத்துவதற்கு, தலத்திருஅவை அரசிடம் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தார் பேராயர் லியோ கொர்னேலியோ.

மத்திய பிரதேச முதலமைச்சர் Shivraj Singh Chouhan அவர்களிடம், ஓராண்டுக்கு முன்னர், நேரிடையாகவே இது குறித்து தான் கேட்டிருப்பதாகவும், இதுவரை அரசிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனவும் கூறினார், பேராயர் கொர்னேலியோ.

அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உடனடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார் போபால் பேராயர் லியோ கொர்னேலியோ.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.