2016-01-19 15:45:00

இந்திய கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன


சன.,19,2016. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது, அண்மை ஆண்டுகளில் அதிகரித்து வருவதாக, இத்திங்களன்று வெளியிடப்பட்ட கிறிஸ்தவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்தியக் கிறிஸ்தவர்கள் குறித்து ஆண்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மும்பையை மையமாகக் கொண்ட கிறிஸ்தவ உரிமை அமைப்பொன்று, 2015ம் ஆண்டில் 365க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இத்தாக்குதல்களில், 7 கொலைகள், கோவில்கள் சூறையாடப்படல், வழிபாடுகள் தடுத்து நிறுத்தப்படல் போன்றவைகளும் உள்ளடங்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 20 முதல் 25 விழுக்காடு அதிகரித்துள்ளதாக கூறும் இந்த கிறிஸ்தவ உரிமை அமைப்பு, தாக்குதல்களின் எண்ணிக்கை, வெளியே அறிவிக்கப்படுவதைவிட, நிச்சயம் அதிகமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. 

ஆதாரம் : UCAN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.