2016-01-12 16:17:00

கொரியத் தீபகற்பத்தில் அமைதியை ஊக்குவிக்க WCC வேண்டுகோள்


சன.12,2016. வட கொரிய கம்யூனிச நாடு, ஹைட்ரஜன் அணுகுண்டுப் பரிசோதனையை நடத்தியதைத் தொடர்ந்து பதட்டநிலைகள் ஏற்பட்டுள்ளவேளை, கொரியத் தீபகற்பத்தில், பதட்டநிலைகளைக் குறைத்து, அமைதியை ஊக்குவிக்குமாறு, WCC உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம் உலக சமுதாயத்தைக் கேட்டுள்ளது.

உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், நீதி மற்றும் அமைதித் திருப்பயணத்திற்குத் தன்னை அர்ப்பணித்துள்ளவேளை, மரணத்தை வருவிக்கும் இராணுவப் பதிலடி வழியாகப் பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சிப்பதை தவிர்த்து, நம்பிக்கையூட்டும் வேறு வழிகளில் ஈடுபடுமாறு கேட்டுள்ளார் WCC தலைவர் அருள்திரு Olav Fykse Tveit.

எழுபது ஆண்டுகளுக்கு மேலாகப் பிளவுண்டிருக்கும் கொரியத் தீபகற்பத்தில், உயர் இராணுவ அச்சுறுத்தலால் மக்கள் தொடர்ந்து பிரிக்கப்பட்டு உள்ளனர், அமைதி பற்றிய கண்ணோட்டமும் கனவும் அச்சுறுத்தப்பட்டே வருகின்றன என்றும் கூறியுள்ளார் Tveit.

வட கொரியா, சனவரி 5ம் தேதி ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனையை நடத்தியதாக அறிவித்துள்ளது.

ஆதாரம் : UCAN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.