2016-01-11 16:02:00

திருத்தந்தையின் சனவரி, பிப்ரவரி மாதத் திருவழிபாடுகள்


சன.11,2016. 2016ம் ஆண்டு சனவரி, பிப்ரவரி மாதங்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றும் திருவழிபாடுகள் குறித்த விபரங்களை, இத்திங்களன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பாளரான பேரருள்திரு குய்தோ மரினி.

புனித பவுல் மனந்திரும்பிய விழாவான சனவரி 25, திங்கள் மாலை 5.30 மணிக்கு உரோம் புனித பவுல் பசிலிக்காவில் மாலைத் திருப்புகழ்மாலை, பிப்ரவரி 2, செவ்வாய் மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் பசிலிக்காவில் துறவியர் ஆண்டின் நிறைவு வழிபாடு, பிப்ரவரி 10, திருநீற்றுப் புதனன்று மாலை 5 மணிக்கு வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி, இரக்கத்தின் மறைப்பணியாளரை பணிக்கு அனுப்பும் நிகழ்வு, பிப்ரவரி 12 முதல் 18 வரை மெச்கிகோ திருத்தூதுப்பயணம், தூய பேதுருவின் தலைமைப்பீட விழாவான பிப்ரவரி 18ம் தேதி வத்திக்கான் பசிலிக்காவில் காலை 10.30 மணிக்கு திருப்பலி, திருப்பீடத் தலைமையக யூபிலி ஆகியவை திருத்தந்தையின் திருவழிபாடு நிகழ்வுகள் ஆகும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.