2016-01-06 14:56:00

சனவரி 18 முதல் 25 முடிய கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்


சன.06,2016. "நாசரேத்தின் இயேசுவில் இரக்கம் தோன்றி, வாழ்கிறது" என்ற வார்த்தைகளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சனவரி 5, செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

மேலும், சனவரி 18ம் தேதி முதல் 25ம் தேதி முடிய கடைபிடிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கு, "உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி" (1 பேதுரு 2:9) என்று, திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட சொற்கள், மையக் கருத்தாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஒன்றிப்பு வாரத்தில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு செபங்களை, லாத்வியா நாட்டில் உள்ள கத்தோலிக்கரும், கிறிஸ்தவர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் திருஅவைகளின் அவையும், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளும் இந்த முயற்சிகள், சனவரி 25, திருத்தூதர் புனித பவுல் மனமாற்றம் திருவிழாவன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.