2016-01-06 15:01:00

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், 'இரக்கம் நிறைந்த விருந்தோம்பல்'


சன.06,2016. நடைபெற்றுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் ஒரு அங்கமாக, 'இரக்கம் நிறைந்த விருந்தோம்பல்' என்ற ஒரு முயற்சியை, இத்தாலிய துறவு அமைப்பினர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இந்த சிறப்பு யூபிலி ஆண்டைக் கொண்டாட உரோம் நகரில் உள்ள பசிலிக்கா பேராலயங்களின் புனிதக் கதவுகளை நாடி, இந்நகருக்கு வருகை தர விழையும் வறியோர் தங்குவதற்கென, இலவச இடங்களும், உணவும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உரோம் நகருக்கு வரும் வறியோர், தங்கள் பங்குத் தந்தையரிடமிருந்து பெற்றுவரும் கடிதங்களின் துணையோடு இந்த உதவியைப் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.

இவ்வாண்டு முழுவதும் தொடரும் இந்த நற்பணி முயற்சியின் வழியே, இத்தாலியின் 14 பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட துறவு அமைப்புக்களில் இந்த இலவச விருந்தோம்பல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.