2016-01-06 15:11:00

அயர்லாந்து ஆயர்களின் 2016 புத்தாண்டு செய்தி


சன.06,2016. கடந்து வந்த 2015ம் ஆண்டு, மனித சமுதாயத்தை நொறுக்கிய துயரங்களையும், துயர் துடைப்பதில் உன்னதமான முயற்சிகளையும் சந்தித்தது என்று அயர்லாந்து ஆயர்கள் தங்கள் புத்தாண்டு செய்தியில் கூறியுள்ளனர்.

அயர்லாந்து ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதி அவையின் தலைவர், ஆயர் John McAreavey அவர்கள் விடுத்துள்ள இந்த புத்தாண்டுச் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள புத்தாண்டு நாள் அமைதிச் செய்தியை அனைத்துப் பங்குத் தளங்களிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் வாசித்து பயன்பெறவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

'உலக மயமாக்கப்பட்ட அக்கறையின்மை' மற்றும் 'தகவல்களின் மிக அதிகத் தாக்கம்' என்று திருத்தந்தை கூறும் எண்ணங்களை அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று ஆயர் McAreavey அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

நடைபெற்றுவரும் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டில், இரக்கம் நம்மிடையே உருவாக்கும் மாற்றங்களை உணர நாம் வாய்ப்பளிக்கவேண்டும் என்றும் ஆயர் McAreavey அவர்கள் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.