2016-01-04 14:40:00

திருப்பீடம்,பாலஸ்தீனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு...


சன.04,2016. திருப்பீடத்திற்கும், பாலஸ்தீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வந்துள்ளது என்று, திருப்பீடம் அறிவித்துள்ளது.

2015ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி திருப்பீடமும், பாலஸ்தீனாவும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது என்று, சனவரி 02, கடந்த சனிக்கிழமையன்று திருப்பீடம் அறிவித்தது.

பாலஸ்தீனாவில் திருஅவையின் வாழ்வு மற்றும் நடவடிக்கைகளின் முக்கியமான கூறுகளை ஏற்கும் அதேவேளை, புனித பூமியில் இடம்பெற்று வரும் மோதல்களுக்கு உரையாடல் வழியாக, அமைதியான தீர்வு காணப்படுவதற்கு, திருப்பீடத்தின் ஆதரவுக்கு இந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.