2015-12-19 15:36:00

விஜயவாடா மறைமாவட்டத்தின் புதிய ஆயர் ஜோசப் ராஜா


டிச.19,2015. இந்தியாவின் விஜயவாடா மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி Joseph Raja Rao Thelegathoti அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Monfort மறைப்பணியாளர் சபையின் மாநில அதிபராக பெங்களூருவில் பணியாற்றிவந்த புதிய ஆயர் Joseph Raja Rao Thelegathoti அவர்கள், ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா மறைமாவட்டத்தின் Peddautapallyல் 1952ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி பிறந்தவர்.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் ஆன்மீக இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், மைசூரிலும், பெங்களூருவிலும் Monfort சபையின் குருத்துவ மற்றும் இறையியல் கல்லூரிகளில் அதிபராகப் பணியாற்றியிருக்கிறார்.

Monfort சபையின் மாநில ஆலோசகர், மாநில அதிபராகவும் பணியாற்றியுள்ள புதிய ஆயர் ஜோசப் ராஜா அவர்கள், உரோம் நகரில் அச்சபையின் பொதுப் பொருளாளராகவும் 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார்.

தற்சமயம் Monfort மறைப்பணியாளர் சபையின் மாநில அதிபராக பெங்களூருவில் பணியாற்றி வந்தார் புதிய ஆயர் ஜோசப் ராஜா.

1950ம் ஆண்டில் விசாகபட்டிணம் உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிந்து மறைமாவட்டமாக உருவான விஜயவாடா மறைமாவட்டத்தில் 2,83,062 கத்தோலிக்கர் உள்ளனர். 146 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 83 துறவற அருள்பணியாளர்கள், 341 அருள்சகோதரர்கள், 791 அருள்சகோதரிகள் மற்றும் 42 குருத்துவ மாணவர்கள் உள்ளனர்.

ஆயர் பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், விசாகபட்டிணம் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்ட பின்னர், விஜயவாடா மறைமாவட்டம், 2012ம் ஆண்டிலிருந்து ஆயரின்றி காலியாக இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.