2015-12-18 15:02:00

இக்கால உலகின் சவால்கள் கிறிஸ்தவர்களுக்கு ஓர் எச்சரிக்கை


டிச.18,2015. கிறிஸ்துவின் பிறப்பு நிகழ்வை நாம் கேட்கும் ஒவ்வொரு நேரமும், கடவுள் நமக்குத் தூரத்திலோ அல்லது நம்மீது ஆர்வமில்லாமலோ இல்லை, ஆனால், அவர் நம் மத்தியில் வருவதற்குத் தீர்மானித்துள்ளார் என்பதையே நினைவுகூர்கிறோம் என்று பாகிஸ்தான் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் Faisalabad ஆயர் Joseph Arshad அவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் செய்தியில், பெத்லகேம் இடையர்கள் அனுபவித்த அதே மகிழ்வையும் ஆர்வத்தையும் கிறிஸ்தவர்கள் அனுபவிக்குமாறு கூறியுள்ளார்.

இக்காலத்தில் மனித சமுதாயம் பல பெரும் சவால்களை எதிர்கொள்கின்றது என்றும், இன்றைய நம் உலகம், நன்மை, தீமை, ஒன்றிப்பு, பிளவு, செல்வம், ஏழ்மை என்று பல்வேறு விடயங்களால் அமைந்துள்ளது என்றும், இவை கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கையை அனுப்புகின்றன என்றும் ஆயரின் செய்தி கூறுகிறது.

இறைவன், படைப்பு மற்றும் உடன் வாழ்வோருடன் கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஒன்றிணைந்து வாழ வேண்டுமென்பதை இச்சவால்கள் முன்வைக்கின்றன என்றும் ஆயர் Arshad அவர்கள் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.