2015-12-17 15:56:00

ஏரோதின் கொலைவெறியிலிருந்து தப்பித்த குழந்தை-ஹாலந்து ஆயர்கள்


டிச.17,2015. ஏரோதின் கொலைவெறி நிறைந்த கரங்களிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு குழந்தை வேறொரு நாட்டிற்கு தப்பித்துச் செல்ல வேண்டியிருந்தது என்ற வார்த்தைகள் அடங்கிய மடல் ஒன்றை, ஹாலந்து நாட்டு ஆயர்கள் வெளியிட்டுள்ளனர்.

வன்முறைகளின் காரணமாக, சொந்த நாடுகளை விட்டு வெளியேறியுள்ள புலம் பெயர்ந்தோரில், குழந்தை இயேசுவைத் தூக்கிக் கொண்டு தப்பித்து ஓடிய மரியாவையும், யோசேப்புவையும் நாம் காண முயல்வோம் என்று ஹாலந்து ஆயர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் மடல் கூறியுள்ளது.

இரக்கத்தின் யூபிலியை பொருளுள்ள வகையில் கொண்டாட, புலம் பெயர்ந்தோர் நமக்கு ஒரு வாய்ப்பையும், பொறுப்பையும் வழங்கியுள்ளனர் என்று ஆயர்களின் மடல் வலியுறுத்துகிறது.

புலம்பெயர்ந்தொரைக் குறித்து தவறான முற்சார்பு எண்ணங்கள் கொண்டிருப்பதை விடுத்து, அவர்களை மனிதர்கள் என்ற நிலையில் வரவேற்று புகலிடம் கொடுக்க இந்த கிறிஸ்மஸ் காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று ஹாலந்து ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.