2015-12-15 17:09:00

இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிதத்தில் வளர அழைப்பு


டிச.15,2015. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், மனிதம் நிறைந்தவர்களாகவும், இயேசுவை நெருங்கிச் செல்வதற்கு உதவும் புண்ணியங்களில் வளரும்படியாகவும் கேட்டுக்கொண்டார் ராஞ்சி பேராயர் கர்தினால் டெலஸ்போர் டோப்போ.

ராஞ்சி அன்னை மரியா பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து வைத்த திருப்பலியில் மறையுரையாற்றிய கர்தினால் டோப்போ அவர்கள், இறைவனிடம் மிக நெருங்கிச் செல்வதற்கு இந்த யூபிலி ஆண்டை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.

மேலும், போபாலின் புனித பிரான்சிஸ் அசிசியார் பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து வைத்து மறையுரையாற்றிய பேராயர் Leo Cornelio அவர்கள், இன்று இப்புனிதக் கதவு வழியாகச் செல்கிறோம், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத் தந்தையர் உலகுக்குத் திறந்து வைத்த மற்றொரு கதவையும் நினைவுகூர்வோம் என்று கூறினார்.

ஒடிசா மாநிலத்தில், கட்டாக் புவனேஷ்வர் பேராலயப் புனிதக் கதவுத் திறப்பு நிகழ்வில், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்டனர் என்று கிறிஸ்தவ செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : Agencies /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.