2015-12-14 16:27:00

கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பூமி சுற்றும் வேகம் குறைகிறது


டிச.14,2015. கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கிய, கனடாவின் Alberta பல்கலைக்கழக இயற்பியல் பேராசிரியர் Mathieu Dumberry அவர்கள், பூமியின்  வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

இதனால் துருவங்களின் அடர்த்தி குறைவதும், நிலவின் ஈர்ப்பு சக்தியும், பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக Dumberry அவர்கள் தெரிவித்தார்.

இவ்வாறு பூமி மெதுவாகச் சுழல்வதால் ஒரு நாளின் நீளம் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ள Dumberry அவர்கள், அடுத்த நூற்றாண்டிற்குள், ஒரு நாள் பொழுதில், 1.7 மில்லி நொடிகள் நீளும் என்று கூறியுள்ளார்.

மேலும்  பருவ நிலை மாற்றம், கடல் நீர்மட்ட உயர்வு போன்றவற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கடலோர நகரங்களில், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; அதற்காக, இலட்சக்கணக்கான கோடிகளைக் கொட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார் Dumberry. 

ஆதாரம் : தினமணி/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.