2015-12-14 16:42:00

இறைவனின் கனிவையும் ஆறுதலையும் எல்லாரும் பெறுவதற்கு செபம்


டிச.14,2015. குவாதாலூப்பே அன்னை மரியா திருவிழா திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டில் இரக்கப் பண்பை நம்மில் வளர்த்துக்கொள்வதற்கு அன்னை மரியாவிடம் அருள் வேண்டுவோம் என்றும் கூறினார். 

இறைவனின் கனிவையும் ஆறுதலையும் ஒவ்வொருவரும் தவறாமல் உணர வேண்டும், ஏனெனில் இறைவன் எந்த வரையறையுமின்றி, கைம்மாறு கருதாமல் அன்பு கூர்கிறார், இறைவன் நம்மில் அகமகிழும் அளவுக்கு நம்மை அன்பு கூர்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, முதல் பாவம், மனித இயல்பை கறைப்படுத்தவில்லை மற்றும் இறைவனின் சிறப்பு உதவியின்றி நன்மையையோ தீமையையோ தேர்ந்தெடுக்கும் திறமை கொண்டது என்ற கொள்கை போன்றவர் அல்ல இறைவன் என்று கூறினார்.

இரக்கம் என்ற சொல், துன்பம், இதயம் ஆகிய இரு சொற்களாலானது, இதயம் அன்புகூரும் திறனைச் சுட்டிக்காட்டுகிறது, இரக்கம் என்பது மனிதத் துன்பத்தைத் தழுவிக்கொள்ளும் அன்பு என்று விளக்கிய திருத்தந்தை, அன்பே நமது ஏழ்மையை உணர்கிறது என்றும் கூறினார்.

எந்த ஒரு பாவமும், இறைவனின் இரக்கம்நிறை நெருக்கத்தை அல்லது மனந்திரும்புதலுக்கான அருளை அவரிடமிருந்து தடை செய்யாது என்றும், ஆண்டவரே என் கடவுள், அவரே என் மீட்பு என்று ஆனந்தத்தோடு சொல்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.