2015-12-03 11:03:00

நேர்காணல்–மியான்மாரில் இரக்கத்தின் யூபிலி ஆண்டு தயாரிப்பு


டிச.03,2015. அன்பு நேயர்களே, அமல அன்னை விழாவாகிய டிசம்பர் 08, வருகிற செவ்வாயன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலய புனிதக் கதவைத் திறந்து இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டை ஆரம்பித்து வைப்பார் திருத்தந்தை பிரான்சிஸ். உலகின் எல்லா மறைமாவட்டங்களிலும் புனிதக் கதவு திறக்கப்பட்டு இந்த யூபிலி ஆண்டு சிறப்பிக்கப்படும். ஏறக்குறைய எண்பது விழுக்காட்டினர் புத்த மதத்தினராக  உள்ள மியான்மாரில் இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு எப்படி கொண்டாடப்படவிருக்கின்றது என்று இயேசு சபை அருள்பணி சி.அமல் அவர்களிடம் தொலை பேசியில் கேட்டோம். இயேசு சபை அருள்பணி சி.அமல் அவர்கள், மியான்மாரில் சமூகப் பணியில் ஈடுபட்டிருப்பவர். இலங்கை மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தவர் பணிகளுக்குப் பொறுப்பேற்று   பணியாற்றியிருப்பவர்.








All the contents on this site are copyrighted ©.