2015-11-25 16:53:00

இலங்கை கிறிஸ்தவர்கள் வயதானவர்களுக்கு உதவும் கண்காட்சி


நவ.25,2015. உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு நிதி திரட்டும் விதமாக, இலங்கையில், சிலோன் விவிலியக் கழகம், 13வது ஆண்டாக, இவ்வாண்டும் உணவு மற்றும் உடை கண்காட்சியை நடத்தியுள்ளது.

கொழும்பு புறநகர்ப் பகுதியிலுள்ள Rawatawatte  தூதர்களின் அரசி கத்தோலிக்க ஆலயத்தில் இக்கழகம் நடத்திய இக்கண்காட்சியை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டு, தங்களின் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.

தையல் வேலை செய்தவர்கள் மற்றும் சமையலில் தேர்ந்த பல வயதானவர்கள், இக்கண்காட்சி வழியாக, தேவையில் இருக்கும் மற்ற வயதானவர்களுக்கு உதவியுள்ளனர்.

இளம் தலைமுறைகள், வயதானவர்களுக்கு அன்பும், கருணையும், அக்கறையும் காட்டவேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காக, இத்தகைய கண்காட்சி, கடந்த 13 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது என்று, சிலோன் விவிலியக் கழகத்தின் பொதுச் செயலர் லட்சுமி ஃபெர்னான்டோ அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.