2015-11-20 16:27:00

இயற்கைப் பாதுகாப்பு ஊடகவியலார் கருத்தரங்கிற்கு வாழ்த்து


நவ.20,2015. இத்தாலியின் Rieti நகரில் நடைபெற்றுவரும் 12வது அனைத்துலக இயற்கைப் பாதுகாப்பு ஊடகவியலார் கருத்தரங்கிற்கு நல்வாழ்த்துக்களையும் அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீட குடும்ப அவையும், Greenaccord என்ற அமைப்பும் இணைந்து நடத்தும் இக்கருத்தரங்கிற்கு, திருத்தந்தையின் பெயரில் தந்திச் செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.   

இதில் கலந்துகொள்ளும் அறிவியலாளர்கள், பத்திரிகையாளர், மாணவர்கள் மற்றும் பிறருக்கு அனுப்பியுள்ள இச்செய்தியில், இயற்கையைப் பாதுகாப்பதற்கு நமக்கு இருக்கும் பொதுவான பொறுப்புகள் பற்றிச் சிந்திப்பதற்கு இவர்கள் எடுத்திருக்கும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.

மனித மற்றும் சுற்றுச்சூழல் தரத்தைப் பாதுகாப்பதற்கு அரசியல் நிறுவனங்களுக்கும், குடிமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகவியலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.