2015-11-19 15:53:00

நேர்காணல் – அடிநிலக்கல்லறைகள் இரகசிய ஒப்பந்தம்


நவ.19,2015. இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கம் நடைபெற்று வந்த சமயத்தில், 1965ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி உரோமையில் 42 ஆயர்கள் சேர்ந்து, Pact of the Catacombs என்ற அடிநிலக்கல்லறைகள் இரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நவம்பர் 16, கடந்த திங்களன்று உரோமையில் பன்னாட்டு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் இலங்கை அருள்பணி முனைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள் உட்பட ஏறக்குறைய 300 பேர் கலந்துகொண்டனர்.  ஆசிய இறையியலாளராக கலந்து கொள்வதற்கு இவர் அழைக்கப்பட்டிருந்தார். கடந்த 19 ஆண்டுகளாக இலங்கைக்குச் செல்ல இயலாமல் இருக்கும் அருள்பணி முனைவர் எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள் தற்போது ஜெர்மனியில் மறைப்பணியாற்றி வருகிறார்








All the contents on this site are copyrighted ©.