2015-11-17 16:20:00

பாரிஸ் வன்முறை திருஅவையின் புலம்பெயர்வோர் பணியை மாற்றாது


நவ.17,2015. பாரிசில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்கள், புலம்பெயர்வோருக்கு திருஅவை ஆற்றிவரும் பணிகளில் மாற்றத்தைக் கொணராது என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.

பாரிஸ் வன்முறையை முன்னிட்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் எல்லைகள் கிறிஸ்தவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மூடப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டுள்ள வேளை, இவ்வாறு தெரிவித்துள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.

வன்முறை மற்றும் சமூகத் தீமைகளுக்கு அஞ்சி, தங்களின் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறும் மக்களுக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டு திருஅவை ஆற்றிவரும் பணிகளைத் தொடரும் என்று, அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Joseph E. Kurtz அவர்கள் இத்திங்களன்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.