2015-11-03 16:08:00

ரொமேனியா தீ விபத்தில் இறந்தோர் - திருத்தந்தை அனுதாபச் செய்தி


நவ.03,2015. ரொமேனியாவின் Bucharestல், இரவு நடன விடுதி ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் எண்ணற்ற இளையோர் உயிரிழந்தது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தி அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

உயிரிழந்தோருக்கான செபங்களுக்கு உறுதி கூறியுள்ள அதேவேளை, தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு அருகாமையில் இருப்பதாகவும் திருத்தந்தையின் சார்பில் இந்த தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

கடந்த வெள்ளியன்று இரவு, Bucharest இரவு நடன விடுதியில் இடம்பெற்ற தீ விபத்தில், இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர், 130 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 90 பேர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.