2015-11-02 15:14:00

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் அமைதிக்கு விண்ணப்பம்


நவ.02,2015. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுவரும் அனைத்து தரப்பினரும், வன்முறைகளை முடிவுக்குக் கொணர முன்வரவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் இந்த அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்டில் புலம்பெயர்ந்தோரோடு பணியாற்றும் கம்போனி துறவுசபையினருடனும், தலத்திருஅவைப் பணியாளர்களுடனும், தன் நெருங்கிய ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையே, மத்திய ஆப்ரிக்க குடியரசின் பாங்குயி (Bangui) நகரில் உள்ள பாத்திமா பகுதியில், தீவிர மோதல்கள் தொடர்வதாகவும், Protestant கிறிஸ்தவக் கோவில் ஒன்று தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.