2015-11-02 15:34:00

இரஷ்ய விமான விபத்து குறித்து திருத்தந்தையின் அனுதாபத் தந்தி


நவ.02,2015. இரஷ்ய விமானம் ஒன்று சீனாய் தீபகற்பத்தில் விபத்துக்குள்ளாகியதைத் தொடர்ந்து, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி ஒன்று, அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்,  இரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்கள், மற்றும், தங்கள் உறவினர்களை இழந்தவர்களுக்கு திருத்தந்தை, தன் செபங்களை வழங்குவதோடு, இரஷ்ய மக்களின் இத்துயரில் பங்குகொண்டு, தன் ஆழந்த அனுதாபங்களை அவர்களுக்கு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, இரஷ்ய விமானம் ஒன்று, எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சீனாய் தீபகற்பத்தில் விபத்துக்குள்ளாகியதில், அவ்விமானத்தில் பயணம் செய்த அனைவரும், அதாவது, 17 குழந்தைகள், 7 விமானப் பணியாளர்கள் உட்பட 224 பேர் உயிரிழந்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.