2015-10-31 16:24:00

பாகிஸ்தனில் துயர்துடைப்புப் பணிகளில் காரித்தாஸ் முன்னிலை


அக்.,31,2015. அண்மைய நில நடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் நகர்களில், கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனம், முன்னணியில் நின்று, துயர் துடைப்புப் பணிகளை ஆற்றி வருகிறது.

272 பேரின் உயிரிழப்புக்கும், இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் காயமடைதலுக்கும் காரணமான பாகிஸ்தான் நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்ட Malakand, Swat, Dir, Peshawar மற்றும் Islamabad மாவட்டங்களில் பணியாற்றிவரும் பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் பணியாளர்கள், வரவிருக்கும் குளிர்காலத்திலிருந்து மக்களை காப்பாற்ற போதிய ஏற்படுகளைச் செய்து வருகின்றனர். 

ஒவ்வொரு மாவட்டத்தின் தல அதிகாரிகள், நல அமைப்புகள் மற்றும் குடும்பங்கள் வழியாக, தேவையான உதவிகளை வழங்கிவரும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, கடும் குளிர் காலம் அண்மித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தற்போதே தேவையான போர்வைகள், உணவுப்பொருட்கள் போன்றவற்றை வழங்குவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.