2015-10-31 16:09:00

நவம்பர் மத்தியில் திருத்தந்தையை சந்திக்கிறார் ஈரான் அதிபர்


அக்.,31,2015. நவம்பர் மாத மத்தியில் உரோம் நகருக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஈரான் அதிபர் Hassan Rohani அவர்கள், தன் பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக திருத்தந்தையையும் சந்திப்பார் என திருப்பீடத்திற்கான ஈரான் தூதரகம் அறிவித்துள்ளது.

நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் உரோம் நகருக்கு பயணம் மேற்கொண்டு, இத்தாலிய அரசுத்தலைவரையும் பிரதமரையும் சந்திக்கவுள்ள ஈரான் அரசுத் தலைவர், அதே நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்திப்பார் என திருப்பீடத்திற்கான ஈரான் தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகின்றது.

திருஅவைத் தலைவராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதவியேற்ற அதே ஆண்டான 2013ல் தான், ஈரான் அரசுத் தலைவரும் பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : ANSA /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.