2015-10-24 16:14:00

51வது உலக திருநற்கருணை மாநாட்டுக்கு கர்தினால் போ


அக்.24,2015. பிலிப்பைன்சில் 2016ம் ஆண்டு சனவரி 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 51வது உலக திருநற்கருணை மாநாட்டில் தனது பிரதிநிதியாக கலந்துகொள்வதற்கு, யாங்கூன் பேராயர் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“கிறிஸ்து உன்னில் இருக்கிறார், அவரே மகிமையின் நம் நம்பிக்கை”(கொலோ.1:27) என்ற தலைப்பில் பிலிப்பைன்சின் செபுவில் 51வது உலக திருநற்கருணை மாநாடு இடம்பெறவிருக்கின்றது.

திருநற்கருணை, நம் வாழ்விலும், கத்தோலிக்கத் திருஅவையின் பணியிலும் மைய இடத்தைக் கொண்டிருக்கின்றது என்ற விழிப்புணர்வை ஊக்கப்படுத்துவதற்காக திருநற்கருணை மாநாடுகள் இடம்பெறுகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வுலக மாநாடு ஏதாவது ஒரு நாட்டில் இடம்பெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.