2015-10-22 16:57:00

கோப்பு கடும்புயல் இடர்துடைப்புப் பணிகள், காரித்தாஸ்


அக்.22,2015. பிலிப்பைன்சில் கோப்பு(Koppu) கடும் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு காரித்தாஸ் கத்தோலிக்க பிறரன்பு நிறுவனம் இடர்துடைப்புப் பணிகளில் முன்னின்று ஆற்றி வருகின்றது.

பிலிப்பைன்சின் வட பகுதியில், மலைகள் நிறைந்த மாநிலங்களைப் பாதித்துள்ள கோப்பு கடும் புயலால் ஐந்து இலட்சம் பேர் வரை புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் குறைந்தது 54 பேர் இறந்துள்ளனர்.

லுசோன் கடல்பகுதியில் மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்திலும், பின்னர் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசிய கடும் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்டுள்ள நிலைமையை சரிசெய்வதற்கு வாரங்கள் எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.