2015-10-17 16:33:00

2030ன் வளர்ச்சித்திட்ட இலக்குகள் ஏழ்மையை ஒழிக்க உதவும்


அக்.17,2015. ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகள் முழுமையாக செயல்படுத்தப்படுவது, உலகில் ஏழ்மையை ஒழிப்பதற்கு உதவும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறியுள்ளார்.

அக்டோபர் 17, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக ஏழ்மை ஒழிப்பு தினத்திற்கென வெளியிட்ட செய்தியில், ஐ.நா. உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்புதிய வளர்ச்சித்திட்ட இலக்குகளில் 17 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் உலகில் நம் காலத்தில் ஏழ்மையை அகற்றிவிட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் பான் கி மூன்.

கடந்த 25 ஆண்டுகளில் நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் கடும் ஏழ்மை நிலையிலிருந்து வெளிவந்துள்ளனர் எனினும், இன்னும் 90 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.

“உறுதியான எதிர்காலம் : ஏழ்மை மற்றும் பாகுபாட்டை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சி” என்ற தலைப்பில் 2015ம் ஆண்டின் உலக ஏழ்மை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆதாரம் : UN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.