2015-10-15 16:08:00

உலகின் அமைதிக்காக அனைத்துலக செப வாரம்


அக்.15,2015. மக்கள் மற்றும் நாடுகளின் மனமாற்றம், உலகில் அமைதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழ்வுக் கலாச்சாரம் புதுப்பிக்கப்படல் போன்ற கருத்துக்களை மையப்படுத்தி, இவ்வெள்ளி முதல் ஒரு வாரத்திற்கு அனைத்துலக செபம் மற்றும் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 16 முதல் 24 வரை இடம்பெறும் இந்த அனைத்துலக செபம் மற்றும் உண்ணா நோன்பு நிகழ்வில், வத்திக்கானில் நடைபெறும் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்காகவும் செபிக்க வேண்டுமென்று உலகக் கத்தோலிக்கர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒன்பது நாள்கள் கொண்ட இச்செப நிகழ்வின் நிறைவாக, வாஷிங்டன் அமல அன்னை தேசிய பசிலிக்காவில் செபவழிபாடு நடைபெறும்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.