அக்.14,2015. நம் வாழ்வின் ஒவ்வொரு நேரத்திலும், சகோதர அன்பும் இறைவனின் மகிமையும் நம்மைப் பின்தொடர்கின்றன என்று, குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் கூறினார் ஈக்குவதோர் பேராயர் ஒருவர்.
இப்புதன் காலை 9 மணிக்குத் தொடங்கிய இம்மாமன்றத்தின் 8வது பொது அமர்வின் தொடக்க திருப்புகழ்மாலை செபத்தில் மறையுரையாற்றிய ஈக்குவதோர் நாட்டின் Cuenca பேராயர் Luis Gerardo Cabrera அவர்கள் இவ்வாறு கூறினார்.
நம் வாழ்வில் பிறரின் இருப்பு, நாம் நம் சொந்த நலனிலிருந்து வெளியேறி பிறரின் தேவைகள் பற்றியும், பிறர் மாண்புடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு உதவுவது பற்றியும் சிந்திக்க வைக்கின்றன என்றும் கூறினார் பேராயர் Gerardo Cabrera .
பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரின் அன்பிலிருந்து பிறக்கும் மதிப்பு, தோழமையுணர் போன்ற விழுமியங்களைக் கற்றுக்கொள்ளும் பள்ளியாக குடும்பம் அமைந்துள்ளது என்றும் கூறினார் பேராயர் Gerardo Cabrera.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |