2015-10-12 16:35:00

வத்திக்கான்:வீடற்றவர்களுக்கு உறங்கும் இல்லம் திறப்பு


அக்.12,2015. உரோமையில் குளிர்காலம் தொடங்கும் இவ்வேளையில், வீடுகளின்றி தெருவில் வாழும் மக்களுக்கென உறங்கும் இல்லம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இயேசு சபையினர் நன்கொடையாக வழங்கியுள்ள இந்த இல்லத்திற்கு இரக்கத்தின் நன்கொடை என்று திருத்தந்தை பெயரிட்டுள்ளார். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திற்கு அருகில் Penitenzieri சாலையில் இந்த இல்லம் திறக்கப்பட்டுள்ளது.

இயேசு சபையினர், பயணியர் நிறுவனமாக இந்த இல்லத்தை நடத்தி வந்தனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துறவு நிறுவனங்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று இயேசு சபையினர் இந்த இல்லத்தை அளித்துள்ளனர். 34 பேர் இரவில் இங்கு தங்க முடியும் மற்றும் இவர்களுக்கு காலை உணவும் வழங்கப்படுகின்றது என்று, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான பேராயர் Konrad Krajewski அவர்கள் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.