2015-10-12 16:17:00

திருப்பீட சிறார் பாதுகாப்பு அவையின் 2வது ஆண்டுக் கூட்டம்


அக்.12,2015. குருத்துவ மற்றும் துறவு வாழ்வுக்கு இளையோருக்குப் பயிற்சியளித்தல், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேய்ப்புப்பணி போன்ற தலைப்புக்களில், திருப்பீட சிறார் பாதுகாப்பு அவை தனது இரண்டாவது நிறையமர்வு ஆண்டுக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை நிறைவேற்றிய திருப்பலியில் கலந்து கொண்டு, உரோமையில் இந்த மூன்று நாள் ஆண்டுக் கூட்டத்தை ஆரம்பித்த இந்த அவையினர் இஞ்ஞாயிறன்று அதை நிறைவு செய்துள்ளனர்.

சிறார் பாதுகாப்பிற்கு வழிமுறைகள், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பராமரித்து அவர்களைக் குணப்படுத்துதல், திருஅவையின் தலைமைத்துவம் மற்றும் இறையழைப்பைப் பெறுவோர்க்குப் பயிற்சி, இறையியலும் ஆன்மீகமும், திருஅவை மற்றும் குடியுரிமைச் சட்டங்கள் என்று, பல்வேறு தலைப்புகளில் இக்கூட்டம் நடைபெற்றது.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.